கொலைச் சம்பவத்தில் இளைஞன் கைது
கேகாலையில் தெரணியகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹிட்டிகந்த பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று (10) காலை இடம்பெற்றுள்ளது.
கொலைசெய்யப்பட்டவர் தெரணியகல, கலஹிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார். கொலைசெய்யப்பட்ட நபருக்கும் இளைஞன் ஒருவனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய இளைஞன் ஒருவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.