இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை
களுவாஞ்சிகுடி துறைநீலாவணை பிரேதேசத்தை சேர்ந்தவர் தான் மேகநாதன்.
இவரது மகள் சரோஜினி(22) என்பவர் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தாயை இழந்து தந்தை பராமரிப்பில் வாழ்ந்து வந்த தற்கொலை செய்துகொண்ட யுவதி தனது வீட்டில் இருந்த நகையை அடகுவைக்க நெருங்கிய ஒருவருக்கு கொடுத்ததாகவும்.
இன்று அதனை மீட்டு தருவதாகவும் துணையிடம் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் சரோஜினி தனது வீட்டின் அறையினுள் தூக்கிட்டு நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் உத்தரவின்படி சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.