NASAவில் கடமையாற்றும் இலங்கை இளம் விஞ்ஞானி மரணம்
அமெரிக்கா NASA வில் கடமை புரிந்து வரும் புத்தளத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி ரொஸ்மின் மஹ்ரூப் திடீரென ஏற்பட்ட சுகயீனம்காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இன்று திடீர் சுகயீன மடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது,
புத்தளம் சாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவரான ரொஸ்மின் மஹ்ரூப் வானியல்யியற்பியல் துறையில் தேர்ச்சி பெற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் NASA வில் கடமையாற்ரிய இலங்கை இளம் விஞ்ஞானியின் மரணம் பெரும் தியரத்தை ஏற்படுத்தியுள்ளது.