யாழில் யுவதியின் தகாத புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய இளைஞன்; நையப்புடைந்த கிராம மக்கள்
யாழ்ப்பாணத்தில் யுவதியின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய இளைஞனின் வீட்டை கிராம மக்கள் சுற்றிவளைத்த இளைஞனை நையப்புடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் வரவழைக்கப்பட்டு வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இளைஞன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதலித்து வந்த யுவதி
நீர்வேலி தெற்கு சிறுப்பிட்டியை சேர்ந்த இளைஞன் ஒருவர் யுவதியொருவரை காதலித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிற்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து யுவதியின் நிர்வாண புகைப்படத்தை இளைஞன் பேஸ்புக்கில் பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்றிரவு அங்கு திரண்டு இளைஞனின் வீட்டை சுற்றிவளைத்து இளைஞனின் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 119 அவசர இலக்கம் மூலம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதோடு அந்த பகுதியில் ரோந்து பணியிலிருந்த பொலிஸார் அங்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது பொலிசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட இளைஞனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் பொலிஸார் ஒருவரும் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.