கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் சித்தியடைந்த இளம் பட்டதாரி பெண் திடீரென உயிரிழப்பு!
கண்டியில் கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் சித்தி பெற்று நியமனம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பட்டதாரி பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஹுன்னஸ்கிரி ரம்புக்பொத்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பிலிப் நக்மா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தெல்தெனிய வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி பி.கே. அபேரத்னவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இளம் பட்டதாரி மாணவி உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் வெளியான காரணம்
இதன்போது மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு ஏற்பட்டமையே யுவதியின் மரணத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் தந்தை மகள் தொடர்பில் தெரிவித்தாவது,
“எனது மகள் ஹுன்னஸ்கிரிய சிவனேஸ்வரா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை படித்தார்.
அதன் பின்னர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பட்டப்படிப்பை முடித்து கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து மெடதும்பர பிரதேச செயலகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு அவள் பயிற்சியின் போது மிகவும் கஷ்டப்பட்டு படித்தாள் என்றும் தெரிவித்துள்ளார்.