யாழ் வைத்தியசாலையில் பலியான இளம் குடும்பஸ்தர் ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்
கிளிநொச்சி 54 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விநாயகர்புரம், கிளிநொச்சியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கோர விபத்து
மேற்படி குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் இன்னொருவரை ஏற்றிக்கொண்டு கடந்த 21 ஆம் திகதி சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் கார் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டபோது எதிரே எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர் உயிரிழந்த நிலையில் படுகாயங்களுக்கு உள்ளானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை விசாரணைகளை மேற்கொண்டார்.