யோஷித ராஜபக்ஷவு வழக்கு; நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றதுடன், முறைப்பாட்டுத் தரப்பு சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிநடத்தலின் கீழ் சாட்சியாளர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

யோஷித ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்டுள்ளார்.
வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை இம்மாதம் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 730 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள ஐந்து காணித் துண்டுகளை கொள்வனவு செய்ததன் மூலம் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தை மீறியதாக குற்றஞ்சாட்டி இந்த வழக்கை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.