இலங்கைக்கு தனது கடைசி நன்கொடையை வழங்கிய தமிழக யாசகர்!
கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நன்கொடை அளித்த தமிழக யாசகர் பூல்பாண்டியன், தமது கடைசி நன்கொடையை தமிழக முதலமைச்சர் நிதிக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில், தனது கடைசி நன்கொடையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அவர் 10 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.
தமிழக அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது என்ற நடைமுறையை 75 வயதான பூல்பாண்டியன் வழக்கமாக கொண்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு முதல் பூல்பாணடியன் 50 லட்சம் ரூபாயை தமிழக அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், தமக்கு வயதாகிவிட்டதால் யாசகம் செய்வதை விடுத்து, கோயில்களுக்கு செல்வதன் மூலம், வாழ்க்கையை செலவிட திட்டமிட்டுள்ளதாக பூல்பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மதுரை ஆட்சியர், பூல்பாண்டியனுக்கு சுதந்திர தினத்தின் போது 'சமூக சேவகர் விருது' வழங்கிக் கௌரவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.