யாழில் சற்றுமுன்னர் இடம்பெற்ற சம்பவத்தால் பரபரப்பு !
யாழ்ப்பாணம் மண்டைதீவு சென் பீற்றர்ஸ் தேவாலயமருகிலுள்ள தவசீலன் என்பவரது வீடு சற்றுமுன்னர் போதைப்பொருள் கடத்தல் கும்பலொன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஊடாக அறியமுடிகின்றது .
சிலமாதங்களுக்கு முன்னர் மண்டைதீவில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சா விற்பனை செய்த நபர்களை மேற்குறித்த தவசீலன் என்பவர் பொலிசாரிடம் காட்டிக்கொடுத்ததாகவும் அதன்பின்னர் தவசீலனை பலமுறை தாக்குவதற்கு அக்கும்பல் முயன்றதாகவும் கூறப்படுகின்றது .
மாமியார் வீட்டின் மீதும் தாக்குதல்
அத்தோடு தவசீலனின் மாமியார் திருமதி மேரி மற்றில்டா தங்கராணி ( முன்னாள் வேலணை பிரதேச சபை உறுப்பினர் ) அவர்களது வீட்டினையும் சில வாரங்களுக்கு முன்பு இக்கும்பல் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது .
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தவசீலனை இக்கும்பலில் இருவர் தாக்கமுற்பட்டபோது அவர் தற்காப்பு தாக்குதல் நடாத்தியதாகவும் அதன் காரணமாக அந்த இருநபர்களும் பொலிஸ் முறைப்பாட்டினை மேற்கொண்டமையால் தவசீலன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சற்றுமுன்னர் தவசீலனது வீட்டுக்குள் நுழைந்த போதைப்பொருள் விற்பனை கும்பல் அவ்வீட்டிலுள்ள பொருட்களை அடித்து உடைத்ததுடன் வீட்டினை தீயிட்டு கொளுத்தியதாகவும் அவ்வீட்டிற்குள் இரு சிறுவர்களும் தவசீலனது மனைவியும் அகப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .