13 வருட தொடர்பால் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

Sri Lanka Police Anuradhapura Sri Lanka Crime Death
By Yadu Oct 08, 2023 03:29 AM GMT
Yadu

Yadu

Report

அநுராதபுரத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அநுராதபுரம் தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜாங்கனை நவசிரிகம பிரதேசத்தில் இக் கொலை நேற்று (07) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் இளைய சகோதரரின் வீட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

திருமணமாகாமல் வாழ்ந்து வந்த கள்ளக் கணவரால் அப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் மின்கம்பி அறுத்ததில் தூக்கி வீசப்பட்ட பெண்

யாழில் மின்கம்பி அறுத்ததில் தூக்கி வீசப்பட்ட பெண்

மூன்று பிள்ளைகளின் தாயான தேவதா பேடிகே ரேணுகா தீபானி சோமதாச (வயது 53) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண் தனது வாழ்வாதார தொழிலாக மீன் பிடித் தொழிலை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண் இச் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் பின்புறமுள்ள வீட்டிலேயே வசித்து வந்துள்ளதாக தேய்விக்கப்பட்டுள்ளது. 

13 வருட தொடர்பால் பெண்ணிற்கு நேர்ந்த சோகம் | Woman Who Had Been In A Relationship For 13 Years

கொலை செய்யப்பட்ட பெண்

சில தினங்களுக்கு முன்னர் வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள தனது மகளின் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இப் பெண்ணை கொலை செய்ததாக கூறப்படும் நபருடன் சுமார் 13 வருடங்களாக தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டு வருகின்றது.

இந்தக் கொலையை செய்ததாக கூறப்படும் நபர் ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் உள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அப் பெண்ணும் நபரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர் எனவும் பெண்ணின் இளைய மகனுடன் ஒன்றாக இருந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக அறிவித்த பிரபல வர்த்தகர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக அறிவித்த பிரபல வர்த்தகர்

13 வருட தொடர்பால் பெண்ணிற்கு நேர்ந்த சோகம் | Woman Who Had Been In A Relationship For 13 Years

முறைப்பாடு

ஒரு மாதத்திற்கு முன்னர் இளைய மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விசாரணையை நடத்த "சமத்த மண்டல" இணக்க சபைக்கு பொலிஸாரால் அனுப்பப்பட்டுள்ளது.

தாய்க்கும், பிள்ளைக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இணக்க சபையில் நேற்றைய தினம் விசாரணை நடத்தப்பட இருந்த போதிலும் அவ் இருவரும் இணக்க சபைக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

அத்தோடு நேற்று பிற்பகல் அப் பெண் வசிந்துவந்த வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் வைத்து “நீங்கள் இணக்க சபைக்கு செல்கிறீர்களா?” என்று பெண்ணை கொலை செய்த சந்தேக நபர் கேட்டுள்ளார் என கூறப்படுகிறது.

யாழ் முக்கிய வீதியில் குப்பை போடுபவர்களின் காணொளியை அம்பலப்படுத்த தயாராகும் இளையவர்கள்!

யாழ் முக்கிய வீதியில் குப்பை போடுபவர்களின் காணொளியை அம்பலப்படுத்த தயாராகும் இளையவர்கள்!

"இல்லை நான் போகமாட்டேன்" எனத் தெரிவித்த பெண் மீன்பிடிப்பதற்காக சென்றுவிட்டு மீண்டும் 2.30 மணியளவில் தனது சகோதரனின் வீட்டுக்கு வந்து மதிய உணவை சாப்பிட்டுவிட்டு அங்கேயே தங்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அப் பெண் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த சந்தேக நபர் நலம் விசாரிப்பதைப் போல அருகில் சென்று இடுப்பில் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தினால் பெண்ணின் மார்பிலும், உடம்பில் சில இடங்களிலும் குத்திக் காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த அப் பெண் அங்கிருந்தவர்களால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கொலையை செய்த கொலையாளியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US