பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் உயிரிழந்த பெண்: வெளியான அதிர்ச்சி உண்மைகள்!
வெலிக்கடை பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த ஆர்.ராஜகுமாரியின் மரணம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (21-06-2023) உத்தரவிட்டுள்ளது.
பதுளை பிரதேசத்தில் 41 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மரண விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த அறிக்கையை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் ஹர்ஷன கெகுனவல உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்ட அதிகாாிகளின் வழிகாட்டலில் சாட்சியமளித்த மகேந்திரன் சுரேஸ் என்ற நபர், வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குள் இராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதைக் கண்டதாக தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் புறக்கோட்டை பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த போது 2 பொலிஸ் அதிகாரிகள் வந்து கைவிலங்கிட்டு வாகனத்தில் ஏற்றி பொரளை - கோட்டா வீதியில் உள்ள ராஜகுமாரி வேலை செய்த வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக சாட்சியாளர் கூறியுள்ளார்.
மேலும் ராஜகுமாரியை அழைத்து வந்த பொலிஸார் ஒருபக்க கைவிலங்கை அகற்றி அவரின் கையில் இட்டதாகவும் சாட்சி கூறினார்.
இவ்வாறு ராஜகுமாரியை அழைத்துச் சென்றபோது அவர் திடகாத்திரமாக இருந்ததாகவும், நன்றாக நடந்து சென்றதாகவும் தொிவித்தாா்.
வாகனத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படும் போது வாகனத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி ராஜகுமாரியிடம், “மோதிரம், வாசனை திரவியப் போத்தல் மற்றும் காலணிகளைத் திருடினாய்” என்று கூறியதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
தானும் ராஜகுமாரியும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், அங்கிருந்த 2 பொலிஸ் அதிகாரிகள் தன்னையும், ராஜகுமாரியையும் தாக்கியதாகவும் அவர்களில் ஒருவர் மொட்டையுடையவர் எனவும் மற்றையவர் ஒல்லியான உயரமானவர் எனவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஒல்லியான உயரமான அதிகாரி ஒருவர் உயிாிழந்த ராஜகுமாரியை றப்பர் குழாயால் தாக்கியதை தான் பார்த்ததாக அவா் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் "சுதர்மா மேடம்" வந்து தாக்க வேண்டாம் என்றும், பிரச்சினையை தீர்க்குமாறும் கேட்டுக் கொண்டதாக சாட்சியாளர் மேலும் கூறியுள்ளார்.
அதன்பின்னா், வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக எதிா்வரும், 26ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.