10 மாதங்களில் இரு பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்! அச்சரிய சம்பவம்
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 41 வயதான பெண் ஒருவர் 10 மாதத்தில் வெவ்வேறு பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் 41 வயதான சரிதா ஹோலண்ட் என்ற பெண்ணே இவ்வாறு குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
திருமணமான சரிதா கர்ப்பம் தரித்ததுடன், பிரசவத்தில் அவருக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் 10 வார இடைவெளியில் சரிதா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.
குறுகிய காலத்தில் அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்தமை தொடர்பில் வைத்தியர்களிடம் ஆலோசனை பெற்றபோது, கர்ப்பம் தரித்தமை உறுதி செய்யப்பட்டதுடன் இரட்டை குழந்தைகள் பிறக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வாரங்கள் 5 நாட்கள் கழித்து சரிதா மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சத்திரசிகிச்சை மூலம் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இந்த நிலையில் தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பிய நிலையில் இது தொடர்பான காணொளியை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த பெண் ஒரு குழந்தை பெற்ற 2ஆவது மாதத்தில் மீண்டும் கர்ப்பம் தரித்து 8ஆவது மாதத்தில் மேலும் 2 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.