பிரதமர் ஹரிணியால் ஒரே நாளில் ஃபேமஸ் ஆன விமல் வீரவங்ச! பிசுபிசுத்த போராட்டம்
புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் வயது வந்தோருக்கான இணைய இணப்பு ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பிரதமரும் கல்வி அமச்சருமான ஹரிணி அமரசூரியவை பதவி வில வேண்டுமென கூறி முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவொன்று நேற்று (12) காலை சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்ப்பித்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச ஒரே நாளில் மிகப் பிரபலமான நபராக மாறியுள்ளார். நாட்டில் கூகிள் சமீபத்திய தேடல்களில் விமல் வீரவன்ச 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிசுபிசுத்துப் போன சத்தியாக்கிரக போராட்டம்
கல்வி அமைச்சிற்கு முன்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்ந்தவர்களால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் பின்னர் விமல் வீரவன்சவின் பெயர் கூகிளில் அதிகமாக தேடப்பட்டுள்ளது. சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்ததோடு, ''கோ ஹோம் ஹரிணி" என்ற வாசகம் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததோடு, ஹரிணியை வீட்டுக்குச் செல்லுமாறும் கடும் கூச்சலிட்டனர். '
கோ ஹோம்'' என்ற வாசகங்கள் கடந்த கால இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றறங்களை ஏற்படுத்தியிருந்த போதிலும், பிரதமர் ஹரிணிக்கு எதிரான இந்த கூச்சல், போராட்டத்தின் இன்று காலை நிலவரப்படி அதிக கூட்டம் இல்லாமல் பிசுபிசுத்துப் போனதாகவே தெரிகின்றது.