சட்டவிரோதமாக விலங்குகள் வேட்டை: 12 பேர் கைது! 8 பேர் தப்பியோட்டம்
இலங்கையில் உள்ள வில்பத்து மற்றும் தப்போவ சரணாலயங்களில் வேட்டைக்குச் சென்ற நான்கு குழுக்களைச் சேர்ந்த 12 பேர் லருவலகஸ்வெவ மற்றும் வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (27-08-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலும், குறித்த நடவடிக்கையின் போது, 8 பேர் தப்பியோடியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த சரணாலயங்களில் தொடர்ந்தும் சட்டவிரோதமாக விலங்குகளை வேடையாடப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்த நிலையில் 2 நாட்களாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் 16 ரவைகள் 7 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரவைகள், வேட்டைக்கு பயன்படுத்தபடும் வெடிபொருட்கள் 5 தொலைப்பேசிகள் 7 கத்திகள் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட ஏனைய பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.