ஏன் சென்றேன்? இலங்கை வந்து 5 மணி நேரத்தில் திரும்பிச்சென்ற பயணி வெளியிட்ட பதிவு!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து மணி நேரம் கழித்துவிட்டு, நாட்டை விட்டுச்சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஜோர்ஜ் ( George) என்ற சுற்றுலா பயணி, இலங்கைக்கு வந்த தனது பயணத் அனுபவத்தை ருவிட்டரில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளியில் அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்ட போது, நாடு திறக்கப்பட்டதாக தெரிவித்ததாகவும், நாட்டின் அனைத்து விதிமுறைகளுக்கும் இணங்கி தாம் பயணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்கா வந்தபோது, ஓரளவு பூட்டுதல் காரணமாக பொது போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களும் செயல்படவில்லை என்பதை உணர்ந்தார். இதனையடுத்து தாம் விமான நிலைய கிராமத்தில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், தனக்கு வேறு வழியில்லை என்பதால், ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, இலங்கை வந்த அதே விமானத்தில் இஸ்தான்புல்லுக்குப் போக முடிவு செய்ததாகவும் அந்தப் பயணி தெரிவித்துள்ளார்.
Breaks my heart to watch this. common guys! the airport needs hold hands with each and every tourist coming in. we cant afford this! #lka pic.twitter.com/of3831u0s3
— Dulith Herath (@DulithHerath) October 10, 2021
இந்நிலையில் நாடு முழுமையாக திறந்திருந்தாலோ அல்லது முழு அல்லது பகுதி பூட்டப்பட்டிருந்தாலோ அதிகாரப்பூர்வமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதோடு “அங்கு பிரச்சினைகள் உள்ளன. நீங்கள் திறந்திருக்க வேண்டும் அல்லது நீங்கள் மூடியிருப்பதை உலகிற்கு சொல்ல வேண்டும், ”என்றும் அந்த சுற்றுலாப் பயணி இஸ்தான்புல்லில் இருந்து வெளியிட்ட காணொளி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
இலங்கை வந்த 05 மணிநேரத்தில் நாடு திரும்பிய சுற்றுலாப் பயணி; விசாரணையில் இறங்கிய அரசாங்கம்