யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது யார்?
யாழ்ப்பாணத்தில் முற்றாக எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வெற்றுக் காணி ஒன்றில் இருந்து இன்று வியாழக்கிழமை (27) மீட்கப்பட்டுள்ளது.
உடுவில் தெற்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்த நிலையில் காணப்படுவதாக, சுன்னாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்க தகடு என நம்பப்படும் இலக்க தகடு ஒன்று காணியின் பிறிதொரு இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இலக்க தகட்டின் அடிப்படையில், உரிமையாளரை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை கடந்த வாரம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நள்ளிரவு வேளை வீதியில் வைத்து சுமார் 10 இலட்ச ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.