தாய் தனது இரு மகன்களுடன் செய்த செயல்
தாய் ஒருவர் தனது அங்கவீனமான மகன்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் கபிதிகொல்லாவ, கனுகஹவெவ பிரதேசத்தில் நேற்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஒரு மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் தாயுடன் மற்றொரு மகன் ஆபத்தான நிலையில் கபிதிகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கபிதிகொல்லேவ கனுகஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் சாந்தகே ரவிது மிஹிரங்க என்ற இருபத்தொரு வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிப்பு
இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் 48 வயதுடைய தாயும், ஒன்பது வயது சகோதரனும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இருபத்தொரு வயதுடைய ரவிந்து மிஹிரங்க ஊனமுற்றவர் எனவும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றுமொரு மகன் காது கேளாதவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளியான பிள்ளைகள் இருவருக்கும் சிகிச்சையளிக்க பணம் இல்லாத காரணத்தினால் குறித்த தாய் இரு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிவில் பாதுகாப்புப்படை வீரரான தந்தை நேற்று அதிகாலை வேலைக்குச் சென்றுவிட்டு காலை 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வீட்டில் காணாத நிலையில் பின்னர் இரண்டு பிள்ளைகளும் கிணற்றில் இருந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.