மாயமான இரு பிள்ளைகளின் தாயாருக்கு நேர்ந்த சோகம்!
வட்டவளை - அக்கரவத்தை தோட்டத்தில் காணாமல் போன நிலையில், தேடப்பட்டு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த தாய் நேற்றைய தினம் (04-07-2022) காணாமல் போன நிலையில் இன்றைய தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் அக்கரவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பி.விஜயலெச்சுமி என்ற தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நோட்டன் ஆற்றுடன் இணையும் அக்கரவத்தை ஆற்றுப்பகுதியில் இருந்து இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் ஹட்டன் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக வட்டவளை வைத்தியசாலைக்குச் கொண்டு செல்லப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.