இலங்கையில் நாளை வெப்ப வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் பல பகுதிகளில் நாளையதினம் (27-04-2024) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் இவ்வாறு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறான நிலையில், போதிய அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், பொது வெளியில் கடுமையான உழைப்பை குறைத்தல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.