ஆயிரங்களை செலவழிக்காது முகத்தை பளபளபாக இருக்க வேண்டுமா...
ஆண்களும் சரி பெண்களும் சரி இன்றைகாலகட்டத்தில் பலரும் தமது முக அழகை பேணுவதற்காக ஆயிரங்களை எடுக்குக்கொண்டு பியூட்டி பார்லர்களை நோக்கி ஓடுகின்றனர்.
அதுமட்டுமல்லாது முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கு அந்த கிரீம், இந்த கிரீம் என ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து கிரீம்களை வாங்கி தடவி வருகின்றோம்.
குறைந்த செலவில் முகத்தை பளபளப்பாக்க...
ஆனால் தேன் மற்றும் கற்றாழை இருந்தால் போதும் குறைந்த செலவில் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாமாம்.
கற்றாழை மற்றும் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் அது முகத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளும்.
என்ன செய்ய வேண்டும்?
ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இருவது நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரை முகத்தை கழுவி வேண்டும்.
இவ்வாறு சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறிவிடும் என்றும் எண்ணை பிசுக்கு இருக்காது.
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்வதற்கு பதிலாக குறைந்த செலவில் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள இந்த முறை உதவும்.