ரிஷாட் மற்றும் பிரேமலால் பாராளுமன்றத்திற்கு வருகை
பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை ரிஷாட் பதியுதீன் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறே இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழும் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி இரு நாடாளுன்ற உறுப்பினர்களும் இன்று நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான ரிசாட் பதியுதீன், நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதில் எவ்வித சட்ட சிக்கல்களும் இல்லையென அண்மையில் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.