பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக இவருக்கு தான் தகுதி இருக்கு! எடிகே கூறிய பதில்
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்-6 தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
சுமார் 95 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
அத்தோடு கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
இனிவரும் நாட்களில் இறுதி சுற்றுவரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
பிக் பாஸ் 6 சீசனின் கடைசி நாமினேஷனும் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது.
இருப்பினும், இதனைத்தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்ட சிலரும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோளார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை புரிந்திருந்தனர்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தார்கள்.
இதனிடையே, உள்ளே வந்திருந்த விஜே பார்வதி, ஏடிகேவிடம் சில போட்டியாளர்கள் குறித்து கேள்விகளை நேருக்கு நேராக எழுப்பி இருந்தார்.
அதில், "விக்ரமனா?, அசிமா?" என கேட்க அதற்கு பதிலளித்த ADK, "விக்ரமன்" என தெரிவித்தார்.
இருப்பினும், இதனைத்தொடர்ந்து, விக்ரமனிடம் பிடிக்காத விடயம் பற்றிய கேள்வியை பார்வதி எழுப்ப, இதற்கு பதிலளித்த ஏடிகே, "விக்ரமனிடம் புடிக்காத விடயம், சில நேரம் கொஞ்சம் கண்மூடித்தனமா ஷிவினுக்கு ஆதரவாக இருப்பதாக தோணும். மத்தபடி அவர் ஒரு நேர்மையான மனிதர். நல்ல குணம் படைச்சவர்.
மேலும் இந்த வீட்டுல வந்த புதுசுல எனக்கு புடிக்காத இரண்டு பேர் அசிமும், விக்ரமனும். இப்ப இந்த வீட்டுல எனக்கு ரொம்ப புடிச்சது விக்ரமன்னு சொல்லுவேன்.
மேலும், இத்தனை நாள் பழக்கத்துல அவரோட கேரக்டரை ஒவ்வொரு நாளும் பாத்துட்டு வரேன். யார் மனசையும் புண்படுத்த மாட்டாரு. என்னை கேட்டீங்கன்னா டைட்டில் வின்னராக முழு தகுதி விக்ரமனுக்கு இருக்கு" என ஏடிகே விளக்கமளித்துள்ளார்.