வெள்ளம் பெருக்கெடுத்ததினால் வீதிக்கு வந்த வெருகல் மக்கள்
மகாவலி கங்கை வெள்ளம் பெருக்கெடுத்ததினால் அதனை அண்டிய திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களான மாவடிச்சேனை வட்டவன் சேனையூர் போன்ற கிராமத்தில் வசிக்கும் மக்களின் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
150ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு
அதன் காரணமாக சுமார் 150ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை வெருகலாம்பதி மகாவித்தியாலயத்திலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆனைத்தீவு - முத்துச்சேனை வீதி போக்குவரத்து இன்று செவ்வாய்க்கிழ (02) பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை இன்றும் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.
வெருகல் பகுதியும் நீரில் மூழ்கி வருகின்ற நிலையில் கடற்படையினர் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு சென்று உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அத்தோடு வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியும் நீரில் மூகிழ்கி பயணிகள் போக்குவரத்துக்கும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.