மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர மறந்தும் கூட வெள்ளிக்கிழமை இதையெல்லாம் செய்து விடாதீர்கள்
கிழமைகளில் வெள்ளிக்கிழமை என்பது மங்கலகரமான நாளாக கருதப்படுகிறது. இது மகாலட்சுமி மற்றும் அம்பிகைக்கு உரிய முக்கிய வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. மகாலட்சுமியின் முழு அருளை பெறுவதற்குரிய நாளாகவும் வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது.
அதனால் வெள்ளிக்கிழமைகளில் சில காரியங்களை செய்தால் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம். வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டாலே செல்வம் செழிக்கும், கடன் பிரச்சனைகள் விலகும்.
அதே சமயம் வெள்ளிக்கிழமையில் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்வதால் மகாலட்சுமியின் கோபாதிற்கு ஆளாக நேரிடும். ஆகவே வெள்ளிக்கிழமை நாளில் நாம் என்னெ்ன செய்ய வேண்டும் என்னெ்ன செய்ய கூடாது என நாம் இங்கு பார்ப்போம்.
வெள்ளிக்கிழமை நாளில் நாம் என்னென்ன செய்ய கூடாது
வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிக்கக் கூடாது. எனவே வியாழக்கிழமையே ஒட்டடை அடித்து வீட்டை சுத்தம் செய்வது நல்லது.
வெள்ளிக்கிழமையன்று பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். ஆனால் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.
வெள்ளிக்கிழமையன்று முடி வெட்டவோ, முகச்சவரம் செய்யவோ, நகம் வெட்டவோ கூடாது.
பூஜை செய்யத் தேவையான பொருட்களை வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யக் கூடாது. முடிந்தவரை பூஜை அறைப் பொருட்களை முந்தைய தினமே சுத்தம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.
வெள்ளிக்கிழமையில் உப்பு, தயிர், பருப்பு,ஊசி போன்ற மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களை கடனாக கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
வெள்ளக்கிழமை மாலை நேரத்தில் வீட்டை இருள் சூழ்ந்ததாக வைத்திருக்கக் கூடாது.
வெள்ளிக்கிழமையில் பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழற்றவோ அல்லது சுத்தம் செய்யவோ கூடாது.
வெள்ளிக்கிழமையில் ராகு கால நேரமான காலை 10.30 முதல் பகல் 12 வரையிலான நேரத்தில் வீட்டில் விளக்கேற்றக் கூடாது. இதனால் வீட்டில் கலகம் ஏற்படும்.
பழைய துணிகளை வெள்ளிக்கிழமையில் தைக்கக் கூடாது.
வெள்ளிக்கிழமையில் அழுக்கு துணிகளை சேர்த்து வைக்கக் கூடாது. கடன் சுமை அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை நாளில் நாம் செய்ய வேண்டியவை
வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் சுத்தமான சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர்சக்திகள் இருந்தால் விலகிவிடும்.
அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு வெள்ளிக்கிழமை அன்று 11 தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பண வரவு அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமைத்தோறும் குபேர விளக்கில் தாமரை திரி இட்டு விளக்கேற்றி வந்தால் குபேரனின் அருள் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. தொடர்ந்து ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்கிரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.
லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அவளின் அம்சமாக விளங்கும் கல் உப்பினை வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை.