நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள்
நாம் நினைத்த காரியம் எந்தவித தடைகளும் இன்றி நிறைவேற வேண்டும் என்பதே பலரின் ஆசை.
ஆனால் பலநேரங்களில் எதிர்மாறாக எதாவது தடங்கல்கள் வந்து நாம் செய்ய வேண்டிய காரியம் நின்றுவிடும்.
இப்படி தடங்கல்கல் இன்றி முற்றிலும் விடுபட்டு எடுத்த காரியம் அனைத்தும் நிறைவேற இந்த ஒரு மூலிகை வேர் நம்மிடம் இருந்தாலே போதும்.
பொதுவாக ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக விநாயகரை வணங்கும் வழக்கம் அனைவருக்கும் இருக்கிறது.
விநாயகருக்கு உகந்த மூலிகை
அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த மூலிகைச் செடியாக கருதப்படுவது தான் எருக்கன் செடி.
ஆதலால் தான் விநாயகச் சதுர்த்தி அன்று எந்த வகை பூக்களை வைத்தாலும் எருக்குன் பூவை வைப்பதற்கு சமம் ஆகாது என்று கூறுகின்றார்கள்.
பொதுவாக இந்த எருக்குன் செடியை யாரும் வீட்டில் வளர்ப்பது கிடையாது. இந்த எருக்குன் செடியில் இரண்டு வகைகள் உள்ளது.
நீல நிற எருக்குன் செடி மற்றும் வெள்ளை நிற எருக்குன் செடி. அதிக மூலிகை தன்மையும், தெய்வீக சக்தியும் கொண்டது வெள்ளை எருக்குன் செடி. அதனால்தான் பலர் அவர்களது இல்லங்களில் வெள்ளை எருக்கன் செடியான விநாயகரை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றார்கள்.
அவ்வாறு வணங்குவதன் மூலம் வீட்டில் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
எப்போது செடியை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்
குடும்பத் தலைவரின் ராசியில் இருந்து 5ம் இடம், 2ம் இடம் 11ஆம் இடம் நட்சத்திர நாளில் தான் இந்த வெள்ளை எருக்கு செடியின் வேரை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
அதாவது மேஷ ராசியாக இருந்தால் இரண்டாம் இடமாக ரிஷப ராசியும் ஐந்தாம் இடமாக சிம்ம ராசியும் 11 ஆம் இடமாக கும்ப ராசியும் வரும்.
இந்த ராசிகளுக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் தான் நாம் வெள்ளெருக்கு செடி வேரை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
எவ்வாறு சுத்தப்படுத்த வேண்டும்
அந்த வேர் முழுவதும் மஞ்சளை பூசி கோமியத்தை ஊற்றி அந்த வேரை கழுவி பிறகு சுத்தமான தண்ணீரை வைத்து கழுவ வேண்டும்.
பின் சந்தனத்தை அந்த வேர் முழுவதும் பூசி பன்னீரை வைத்து அந்த வேரை கழுவ வேண்டும். பிறகு அந்த வேருக்கு சந்தனம் குங்குமம் வைத்து சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.
எங்கு வைக்க வேண்டும்
சாம்பிராணி காட்டிய வேரை வீட்டின் ஈசானிய மூலையிலோ அல்லது கன்னி மூலையிலோ கட்டி விடலாம். அதற்கு வசதி இல்லாதவர்கள் வீட்டின் பூஜை அறையிலேயே வைக்கலாம். தினந்தோறும் இந்த வேருக்கு நாம் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.
வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு முன் அந்த வேரை நம்முடைய மோதிர விரலால் தொட்டு வணங்கிய பிறகு சென்றால் நாம் நினைத்த காரியங்களை எந்த தடைகளும் இன்றி செய்யலாம்.
தினமும் இவ்வாறு தொட்டு வணங்கி செல்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகி நேர்மறை ஆற்றல்கள் பெருகி ஒரு அபரிவிதமான சக்தி கிடைத்ததை போல் உணர முடியும்.
எளிமையாக கிடைக்கும் இந்த வெள்ளெருக்கு செடியின் வேரை வைத்து ஒருமுறை இப்படி செய்து தினந்தோறும் சாம்பிராணி தூபம் காட்டி மோதிர விரலால் தொட்டு வணங்கிச் சென்றாலேயே நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்ல விதமாக நடைபெறும்.