இலங்கையின் உயர் இராணுவ அதிகாரியின் வாகனத்தை பின்தொடர்ந்த வாகனங்கள்! எழுந்த சர்ச்சை
இலங்கையின் உயர் இராணுவ அதிகாரி ஒருவரின் வாகனத்தினை பின்தொடர்ந்து 7 வாகனங்கள் பாதுகாப்பிற்காக சென்றமை தொடர்பில் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி Chandima Weerakkody கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு மக்கள் உணவு கிடைக்காமல் துன்பங்களை எதிர்கொண்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் இதுபோன்ற உயர் அதிகாரிகளுக்கு அதிகளவு பணத்தை செலவழிப்பது சரியா என்றும் அவர் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், 3 மாதங்களாக முதியோருக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியிருந்தார்.
இத்தகைய சூழலில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு 7 வாகனங்கள் அணிவகுப்புக்கு அழைத்துச் செல்ல பணம் ஒதுக்கியது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.