வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த வவுனியா இளைஞன்! பெரும் சோக சம்பவம்
வவுனியா - மன்னார் வீதயில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டைப் பகுதியில் நேற்றைய தினம் (20-07-2023) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவிலிருந்து மன்னார் வீதி வழியாக இளைஞன் ஒருவர் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, குறித்த மோட்டர் சைக்கிள் 4ம் கட்டைப் பகுதியில் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து சம்பவத்தில் வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த மின்சார சபையில் கடமையாற்றும் 32 வயதுடைய சஜந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.