வவுனியா வைத்தியசாலை காவாலிகள் மீது இளைஞர்கள் கொடூர தாக்குதல்!
வவுனியா பொது வைத்தியசாலையின் பாதுகாப்பாளர்கள் மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (15-04-2024) இரவு இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு11மணியளவில் வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக இளைஞர்கள் குழு ஒன்று வருகை தந்துள்ளது.
இதன்போது கடமையில் இருந்த காவலாளிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்ப்பட்டுள்ளது.
அது கைகலப்பாக மாறியது. குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான காவலாளி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது