வவுனியாவில் மாடுகளால் மோட்டர் சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
வவுனியாவில் மாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விபத்து சம்பவம் வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் இன்று (05-01-2022) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்து குறித்து தெரியவருவதாவது, வவுனியா – குருமன்காடு – திருநாவற்குளம் பிரதான வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்த போது, புகையிரத பாதை ஊடாக புகையிரதம் சென்றுள்ளது.
இந்நிலையில், புகையிரதப் பாதைப் பகுதியை அண்மித்து மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மாடுகள் புகையிரத சத்தம் காரணமாக சிதறி ஓடிய போது வீதியால் சென்ற குறித்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து சம்பவத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் வவுனியா வைத்தியசாலைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.