இலங்கைப் பணக்காரர்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை
இலங்கைப் பணக்கர்களிடம் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மாத்திரம் அல்லாது இந்த நாட்டில் பணம் படைத்தவர்கள் அனைவரும் தங்களுடைய வருமானத்தில் இருந்து ஒரு பகுதியை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்க வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய மாதாந்த சம்பளத்தில் 50 வீதத்தை கொரோனா தொற்று நிதியத்திற்கு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அதேபோன்று இந்த நாட்டில் பணம் இல்லாதவர்களின் நன்மை கருதி பணம் உள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை கொரோனா தொற்று ஒழிப்பு நிதியத்திற்கு வழங்க முன்வர வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் இது மிகவும் பொருத்தமானதாக அமையுமென அவர் தெரிவித்துள்ளார்.