இலங்கை கடற்படையுடன் இணைந்த அமெரிக்க போர்க் கப்பல் ; தலைமையேற்ற ஜனாதிபதி
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சமுத்ரவிஜய போர்க் கப்பல் இலங்கை கடற்படை சேவையில் இன்று (4) இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது.

அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இந்தக் கப்பல் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இக்கப்பல், இலங்கை கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டதன் பின்னர், 2026 பெப்ரவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் பால்டிமோரில் உள்ள அமெரிக்க கடலோர பாதுகாப்பு கப்பல் தளத்திலிருந்து கொழும்பு நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.
இக்கப்பல் கடற்படையின் செயல்பாட்டுத் திறனை மேலும் வலுப்படுத்துவதுடன், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், கடல் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் சர்வதேச கடல்சார் சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இக்கப்பல் முக்கிய பங்களிப்பை வழங்கும்.
தாய், தந்தையுடன் சென்ற 2 வயது பெண் குழந்தையின் உயிரை பறித்த சம்பவம் ; குடும்பத்தினருக்கு நேர்ந்த துயரம்
குறிப்பாக, இலங்கையும் இப்பிராந்தியமும் எதிர்கொள்ளும் பாரிய சவாலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய சர்வதேச கடல்சார் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இது மிக முக்கியமானதொரு வளமாக அமையும்.
புதிய கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் கயான் விக்ரமசூரிய கப்பலை உத்தியோகபூர்வமாக பணியில் இணைப்பதற்கான அதிகாரப் பத்திரத்தை ஜனாதிபதி இதன்போது கையளித்தார்.