அமெரிக்க கிரீன் கார்டு தொடர்பில் வெளியானது மகிழ்ச்சித்தகவல்!
அமெரிக்கா கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்காக வழங்கப்படும் கிரீன் கார்டு, ஆண்டுதோறும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அளிக்கப்படுகிறது.
அதிகபட்சமாக ஒரு நாட்டிற்கு 7 சதவீதம்
இதில் அதிகபட்சமாக ஒரு நாட்டிற்கு 7 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வின்படி,
கடும் உடல்நல பாதிப்பு, உடல் ஊனம், வேலை பார்க்கும் நிறுவனத்துடன் வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகளால் கடும் சவால்களை சந்திப்பவர்கள் அதற்கான ஆதாரங்களை அளித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படும் என அமெரிக்க அறிவித்துள்ளது.
அதேவேளை அண்மைகாலங்களில் கணிசமான இலங்கையர்களும் கிரீன் கார்டு பெற்று அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துவரும் நிலையில், இப்புதிய அறிவிப்பு அமெரிக்க செல்லும் கனவுடன் காத்திருப்போருக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.