இலங்கை மக்களுக்கு அவசர அறிவிப்பு!
நாட்டில் தற்போது கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிட் மரணங்கள் பதிவாகாத நிலையில், தற்போது மீண்டும் உயிர்ழப்புக்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன.
அதன்படி நேற்றைய தினம் 3 பேர் கோவிட்டால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியிருந்ததுடன், 129 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது கோவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, முதல் இரண்டு நாட்களில் அதிக காய்ச்சல் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விசேடமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிள்ளைகளில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் தவிர டெங்கு மற்றும் இன்புளுவன்சா நோயாளர்களும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த வாரத்தில் மூச்சுத் திணறல் (wheezing) நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன.