ஆபத்தான நிலையில் பிரித்தானியா: பெண் மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்
பிரித்தானிய அரசு கொரோனா நடவடிக்கைகள் குறித்து முடிவை அறிவியலை மையமாக வைத்து எடுக்கவில்லை என்று EveryDoctor-ன் தலைமை நிர்வாகி டாக்டர் ஜூலியா பேட்டர்சன் (Dr Julia Grace Patterson) குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றும் (27-12-2021) கட்டுப்பாடுகள் குறித்து எந்தவித அறிவிப்பையும் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) வெளியிடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் நிலைமை குறித்து டாக்டர் ஜூலியா பேட்டர்சன் கூறியதாவது,
பிரித்தானியா இப்போது ஓமிக்ரோனால் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆனால், முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டாம் என முடிவு செய்துள்ளனர்.
மேலும், பிரித்தானிய அரசாங்கம் நிபுணர்களின் பேச்சைக் கேட்க விரும்பவில்லை, அது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. நாம் இதற்கு முன் பல முறை இதைப் பார்த்திருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தேசிய சுகாதார சேவை (NHS) தற்போது பெரிய அழுத்தத்தில் உள்ளது என தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் அவரது அமைப்பிடம் வேதனை தெரிவித்திருப்பதாக டாக்டர் ஜூலியா பேட்டர்சன் கூறினார்.