பொது மக்களிடம் உதவியை நாடியுள்ள யாழ். போதனா வைத்தியசாலை தரப்பினர்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இரு சடலங்களை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளவாலை - திருவடி நிலை கடற்கரையில் கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சடலமும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
இவ்வாறான நிலையில் குறித்த இரு சடலங்களையும் அடையாளம் காண உதவுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.