நாட்டை விட்டு உக்ரைன் ஜனாதிபதி ஓடிவிட்டார்! ரஷ்யா வெளியிட்ட தகவவ்
உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky ) நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாக ரஷ்யா நாடாளுமன்றத்தின் கீழவை சபாநாயகர் Vyacheslav Volodin உறுதியாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனை விட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தப்பி ஓடிவிட்டதாகவும், Lvov நகரில் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என உக்ரைன் எம்.பி-க்கள் கூறினார். அதிபர் ஜெலன்ஸ்கி தற்போது போலந்தில் இருப்பதாக வியாசஸ்லாவ் வோலோடின் (Vyacheslav Volodin) அவரது டெலிகிராம் சேனில் பதிவிட்டுள்ளார்.

மேலும், 6 நாட்களுக்கு முன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் தலைநகர் கீவிவை விட்டு வெளியேறி Lvov நகருக்கு தப்பி ஓடிவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், வியாசஸ்லாவ் வோலோடின் கூற்றுகள் பொய் என அம்பலப்படுத்தும் வகையில், ஜெலன்ஸ்கி கீவில் நகரில் இருந்த படி சமூக வலைதளங்களில் பல காணொளிகளை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் , தற்போது அதிபர் ஜெலன்ஸ்கி போலந்திற்கு தப்பி ஓடிவிட்டதாக வியாசஸ்லாவ் வோலோடின் தெரிவித்துள்ள நிலையில், இந்த கூற்று குறித்து தற்போது வரை உக்ரைன் ஜனாதிபதி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதேவேளை, 2 நாட்களுக்கு முன் தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தான் கீவில் தங்கியிருக்கும் இடத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.