இலங்கையின் இந்த சட்டமூலத்தை உன்னிப்பாக கவனிக்கும் பிரித்தானியா!
இலங்கை நாடாளுமன்றம் சர்வதேச இணைய வழங்குநர்கள் மற்றும் பல்வேறு அக்கறையுள்ள தரப்பினரால் கவலைகள் எழுப்பப்பட்ட போதிலும், ஜனவரி 24 அன்று ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.
இந்த நிலையில், ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக ஐக்கிய இராச்சியம் கூறியுள்ளது.
பிரித்தானியாவிற்கான இந்தோ-பசுபிக் மாநில அமைச்சரான Anne-Marie Trevelyan அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
“ஒக்டோபரில் நான் இலங்கை ஜனாதிபதி ரணிலைச் சந்தித்தபோதும், தெற்காசிய இராஜாங்க அமைச்சர் லார்ட் (தாரிக்) அஹ்மட் இலங்கையைச் சந்தித்தபோதும் உட்பட, கருத்துச் சுதந்திரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தச் சட்டத்தின் தாக்கம் தொடர்பில் பிரித்தானியா கவலைகளை எழுப்பியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்