இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளை மற்றும் ஹுனுமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 மற்றும் 47 வயதுடைய இரண்டு பெண்கள் ஆவர்.
58,000 வெளிநாட்டு சிகரட்டுகள்
இரண்டு பெண்களும் நேற்றைய தினம் அதிகாலை வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு பெண்களும் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 58,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 290 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.