வாழைச்சேனை - கொழும்பு வீதியில் விபத்து - பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு வாழைச்சேனை கொழும்பு பிரதான வீதி மியான்குளப் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (06) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழசை;சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த கொழும்பு மட்டக்களப்பு தனியர்பஸ்வண்டி உரிமையாளரான 31 வயதுடைய பரமேஸ்வரன் தனுஜன், 31 வயதுடைய டினே;கா என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்
கொழும்பிலிருந்து குறித்த பஸ்வண்டியின் உரிமையாளர் சம்பவதினமான நேற்று இரவு அவரது உறவினரான பெண் ஒருவரை ஏற்றிக் கொண்டு மட்டக்களப்பு நோக்கி காரில் பிரயாணித்துள்ளனர்.
இந்த நிலையில் வாழைச்சேனை கொழும்பு பிரதான வீதியிலுள்ள மியான்குளம் பகுதி வேகக்கட்டுப்பட்டை மீறி கார் வீதியைவிட்டுவிலகி தடம்புரண்டு மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அந்த பகுதியில்; வீதிச் சோனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினர் அங்கு சென்று உயிரிழந்த நிலையில் இருவரையும் காரில் இருந்து மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழசை;சேனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்