கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன் உட்பட இருவர்!
கொழும்பில் உள்ள இரு பகுதிகளில் இருந்து ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, கல்கிஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகாமையிலும், இரத்மலானை பகுதியிலும் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலும், கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நபரிடம் இருந்து 10.200 மில்லிகிராம் மற்றும் 6.500 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் 22, 42 வயதுடைய இரத்மலானை பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.