மண் குவியலுக்கு புதைந்த இருவர் ; பறிபோன உயிர்,
பதுளை, ஹிந்தகொட, களு டேங்க் வீதியில் ஒரு வீட்டின் பக்கவாட்டுச் சுவர் கட்டிக்கொண்டிருந்த இருவர் மண் குவியலுக்கு அடியில் புதைந்தனர்.
இந்த சம்பவம், 20 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரு நபர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார் இறந்தவர் ஹாலி எல, அந்துடவாவல பகுதியைச் சேர்ந்த 55 வயதானவர் ஆவார்.

மீட்பு பணி
காயமடைந்தவர்கள் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஒப்பந்ததாரர் ஒருவரின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த செய்தி கிடைத்ததும், பதுளை போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் மருத்துவக் குழுவும், சுவ செரிய ஆம்புலன்ஸ் சேவையின் சுகாதார ஊழியர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று மண்ணுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு அடிப்படை முதலுதவி அளித்து பதுளை போதனா மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.
இந்த முயற்சிகளுக்கு இராணுவம், பொலிஸார், பதுளை நகராட்சி மன்ற தீயணைப்புத் துறை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டிருந்தனர்.