அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிடுங்கள்: டொனால்ட் டிரம்ப் விசித்திர யோசனை
அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது குடியரசு கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது உக்ரைன்-ரஷ்யா போர் பற்றிய விவாதம் நடந்தது. அப்போது பேசிய டிரம்ப், "ரஷ்யாவை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம் என்று அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். அவர் முதலில் இப்படி பேசுவதை நிறுத்த வேண்டும்.
மனித நேயத்திற்கு எதிராக ரஷ்யா செயல்படுகிறது. இதை நாம் அனுமதிக்கக்கூடாது. "நேட்டோ அமைப்பானது துரதிர்ஷ்டவசமானது. காகிதப் புலி போல் செயல்படுகிறது."
தொடர்ந்து பேசிய அவர், "போரை நிறுத்த ஒரே வழி உக்ரைன்தான். அமெரிக்க போர் விமானங்கள் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும். அப்போது ரஷ்யாவும் சீனாவும் ஒன்றையொன்று தாக்கும். நாங்கள் அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம்.'' டிரம்பின் பேச்சு அரங்கம் முழுவதும் சிரிப்பலையை கிளப்பியது.