இலங்கையில் பேருந்து நிறுத்தத்தில் லொறிச் சாரதியின் மனிதாபிமானம்!
நேற்று மாலை சிலாபம் நீதிமன்ற பஸ் நிறுத்தத்துக்கு அருகில் பெருமளவு பயணிகள் பஸ்ஸுக்காக காத்திருந்தனர்.
சிலாபத்தில் இருந்து புத்தளம் வீதிக்கு பயணிக்கும் பல பயணிகள் அங்கிருந்தனர். பஸ் ஒன்றும் தென்படாத நிலையில் திடீரென ஒரு லொறி அங்கு வந்தது.
பஸ் தரிப்பிடத்தில் தங்கியிருந்த சாரதியும் உதவியாளரும் பயணிகளிடம், லொறி புத்தளம் மதுரங்குளியை நோக்கிச் செல்வதாகவும், மதுரங்குளிக்குச் செல்பவர்கள் அதில் ஏறுமாறும் கூறியுள்ளனர்.
“காரணமே இல்லாமல் போகும் லொறி. அப்படி போகும் ஆட்கள் இருந்தால். காசு வேண்டாம் ஏறுங்கள்” எனக் கூறினர்.
அதன் பின் பஸ்ஸுக்காக காத்திருந்த பலர் லொறியில் ஏறினர். இதன்போது குழந்தை ஒன்றை வைத்திருந்த பெண்ணுக்கு முன் இருக்கை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் தவிக்கும் இந்த நேரத்தில் மக்களுக்கு உதவ மக்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதை நிரூபித்த நெகிழ்வான தருணம் என சமூக வலைத்தளத்தில் பயணி ஒருவர் பகிர்ந்துள்ளார்.