திருகோணமலை இளம் குடும்பஸ்தர் வெளிநாட்டில் உயிரிழப்பு
திருகோணமலை நாச்சிக்குடா பிரதேசத்தை சேர்ந்த , இளம் குடும்பஸ்தர் கடந்த புதன்கிழமை(28) டுபாய் நாட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் முகம்மது சப்ராஸ் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக டுபாயில் உள்ள பிரபல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இநிலையில் , சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
32 வயதான இளம் குடும்பஸ்தரான இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அதேவேளை உயிரிழந்தவர் கடந்த இரண்டரை வருடங்களாக டுபாய் நாட்டில் தொழில் புரிந்து வந்ததாகவும், அவரது மனைவியும் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.