திருகோணமலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு: இளைஞரொருவர் வைத்தியசாலையில்!
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னியா பகுதியில் வாயு துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்றையதினம் (22-09-2023) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் கன்னியா - கிளிகுஞ்சுமலை 4வது ஒழுங்கையில் வசித்து வரும் 22 வயதான சிவசுப்பிரமணியம் சத்தியவாசன் என்பவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர் வீட்டிலிருந்து 2.40 மணியளவில் வீரியால் பயணித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இருப்பினும் குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் யாரினால் நடாத்தப்பட்டது பற்றிய விபரம் தெரியவில்லை எனவும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இருந்த போதிலும் குறித்த பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதினால் குரங்குக்கு வைக்கப்பட்ட சூடு குறித்த இளைஞரை தாக்கியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.