வெளிநாட்டில் இருந்து வந்த திருகோணமலைவாசிகள் கைது!
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 45 மற்றும் 33 வயதுடைய இரண்டு வர்த்தகர்கள் ஆவார்.
சிகரட்டுகளின் பெறுமதி 59 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா
சந்தேக நபர்களான இருவரும் டுபாயில் இருந்து இன்றைய தினம் அதிகாலை 04.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களான வர்த்தகர்கள் இருவரும் கொண்டு வந்த நான்கு பயணப்பொதிகளில் இருந்து 39,600 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 198 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளின் மொத்த பெறுமதி 59 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா என விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்கள் இருவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.