திருகோணமலை சாலையில் பயங்கர சம்பவம்: இருவர் வைத்தியசாலையில்!
திருகோணமலையில் மீன் ஏற்றி வந்த லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87ம் கட்டை பகுதியில் நேற்றைய தினம் (30-08-2023) காலை பதிவாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் 48 மற்றும் 30 வயதுடைய திருகோணமலை கந்தளாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.