திருகோணமலை புத்தர் சிலை ; சந்தேகநபர்கள் இன்றும் நீதிமன்றில் முன்னிலை
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நகர கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதியின்றி கூடாரம் அமைத்து புத்தர் சிலையை வைத்ததாகக் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி வண. திருகோணமலை கல்யாணவம்ச திஸ்ஸ தேரர், வண. பலங்கொட கஸ்ஸப தேரர், வண. திருகோணமலை சுகிதவம்ச திஸ்ஸ தேரர் மற்றும் வண. நந்த தேரர் ஆகியோர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதேவெளை தேரர்களை விடுவிக்ககோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.