தமிழர் பகுதியில் கோர விபத்து: தந்தை உயிரிழப்பு... மனைவி, மகள் வைத்தியசாலையில்!
திருகோணமலை - கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவத்தில் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (04-07-2024) மாலை கப்பல்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டி சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த சாரதியின் மனைவி மற்றும் மகளும் படுகாயமடைந்துள்ள நிலையில், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.