இலங்கையில் நிராகரிக்கப்படும் முச்சக்கரவண்டிகள்!
தன்னிச்சையான கட்டண அறவீடு காரணமாக பொது மக்கள் முச்சக்கரவண்டி பாவனையில் இருந்து விலகி வருவதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.
சில முச்சக்கரவண்டி சாரதிகள் மோசடியான முறையில் பொதுமக்களிடம் கட்டணங்களை அறவிடுவதாகவும் அவர் கூறினார். இதன் காரணமாக மக்கள் முச்சக்கரவண்டிகளை நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
ஏனெனில் , எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் அதிக அளவில் முச்சக்கரவண்டிகள் கட்டணங்களை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் முச்சக்கரவண்டி சாரதிகள் தன்னிச்சையாக மற்றும் மோசடியான முறையில் பயணிகளிடம் அதிக அளவில் பணம் அறவிடுவதை தவிர்க்க வேண்டும்.
முச்சக்கரவண்டி மானி வாசிப்புக்கு ஏற்றவாறு கட்டணங்களை அறவிட வேண்டும் என்றும், மோசடியாளர்களுக்கு பொது மக்கள் இடமளிக்க வேண்டாம் எனவும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.